ஜூன் 4 பேசுகிறேன்! வாக்களித்த பின் உதயநிதி பேட்டி

by Staff / 19-04-2024 11:56:09am
ஜூன் 4 பேசுகிறேன்! வாக்களித்த பின் உதயநிதி பேட்டி

சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள, வாக்குச்சாவடியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது மனைவி கிருத்திகாவுடன் வந்து மக்களவை தேர்தலுக்கான வாக்கை பதிவு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும், முக்கியமாக இளைஞர்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். மற்றவை பற்றியெல்லாம் ஜூன் 4ஆம் தேதி பேசுகிறேன்” என கூறிவிட்டு கிளம்பினார்.

 

Tags :

Share via

More stories