சேவல் சண்டைக்கு அனுமதி

by Staff / 14-01-2023 02:04:56pm
சேவல் சண்டைக்கு அனுமதி

ஈரோடு மற்றும் திருவள்ளூரில் நிபந்தனைகளுடன் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவர் மேற்பார்வையில் சேவல் சண்டை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேவல்களை துன்புறுத்தவோ, மது கொடுக்கவோ, காலில் கத்தியை கட்டவோ கூடாது என்றும் மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via