ஓட்டுநர்  லைசன்ஸ் பெற  மத்திய அரசு புதிய உத்தரவு 

by Editor / 11-06-2021 04:42:11pm
ஓட்டுநர்  லைசன்ஸ் பெற  மத்திய அரசு புதிய உத்தரவு 


 

ஓட்டுநர் உரிமம் வழங்குவது தொடர்பாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசால் அங்கீகாரம் செய்யப்பட்ட ஓட்டுநர் மையங்களில் பயிற்சி பெற்றால் மட்டுமே இனி ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அரசு அங்கீகாரம் கொண்ட ஓட்டுநர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு வந்து வாகனத்தை இயக்கி காண்பிக்க தேவையில்லை. இந்த உத்தரவு ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
கட்டாயம் அரசு அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையத்தில் மட்டுமே இனி பயிற்சிகள் எடுக்க வேண்டும். அவர்களுக்கு மட்டுமே இனி ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via