தமிழ்நாடு கடுமையான போராட்டத்தை சந்திக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ்

மாநில வன்னியர் சங்க நிர்வாகிகளுடன் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். கொடுக்கவில்லை என்றால் தமிழ்நாடு கடுமையான போராட்டத்தை சந்திக்கும் என்பதை தெரிவிக்கிறேன். போராட்டம் நடைபெறாமல் தடுப்பது அரசின் கையில் தான் உள்ளது. 1980-ல் தொடங்கிய வன்னியர் சங்கம் வன்னியர்களுக்காக செயல்பட்டு வருகிறது" என்றார்.
Tags :