விபசாரத்தில் ஈடுபட முயன்ற 2 வாலிபர்கள் கைது
திருப்பூர் ராம் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் நடத்துவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்தப் பகுதியில் உள்ள வீட்டில் அழகிகளை வைத்து விபசாரத்தில் ஈடுபட முயன்ற பொள்ளாச்சியை சேர்ந்த அப்துல் ரகுமான் (வயது 29), சந்தோஷ் குமார் (25) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
Tags :