கடன் தொல்லை.. விவசாயி தூக்கிட்டு தற்கொலை

by Editor / 19-05-2025 01:19:42pm
கடன் தொல்லை.. விவசாயி தூக்கிட்டு தற்கொலை

தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள ராய்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ரவுலா திருப்பதி ரெட்டி (38). இவர் தனது இரண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வாழ்க்கையை நடத்தி வந்தார். சமீபத்தில் அறுவடை இயந்திரம் வாங்க ரூ.10 லட்சம் கடன் வாங்கியுள்ளார். பயிர் விளைச்சல் குறைவாக இருந்ததாலும், கடனை திருப்பிச் செலுத்த முடியாததாலும் திருப்பதி ரெட்டி கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

 

Tags :

Share via