கார் - லாரி நேருக்கு நேர் மோதல் 3 பேர் உயிரிழப்பு.

by Editor / 03-09-2023 08:14:34am
கார் - லாரி நேருக்கு நேர் மோதல் 3 பேர் உயிரிழப்பு.

செங்கம் டவுன் தோக்கவாடி அருகே திருவண்ணாமலை - பெங்களூரு புதிய பைபாஸ் சாலையில் திருவண்ணாமலையிலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற சரக்கு லாரியும் திருப்பத்தூர் மாவட்டத்திலிருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் திருப்பத்தூர் மாவட்டம்  காக்கனாம்பாளையம் பகுதியை சேர்ந்த யோகேஷ் மற்றும் மணிகண்டன் மற்றும் இவர்களுடன் சென்ற மேலும் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் மழை பெய்து வந்ததால் காரில் பயணம் செய்தவர்கள் தூக்க கலக்கத்தில் எதிரே வந்த லாரி மீது மோதியுள்ளார்களா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் செங்கம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

 

Tags : கார் - லாரி நேருக்கு நேர் மோதல் 3 பேர் உயிரிழப்பு.

Share via