27 மாவட்ட  பள்ளி, கல்லூரிகளுக்கு  இன்று ஒருநாள் விடுமுறை.

by Editor / 09-12-2022 08:39:26am
27 மாவட்ட  பள்ளி, கல்லூரிகளுக்கு  இன்று ஒருநாள் விடுமுறை.

தமிழகத்தில்  27 மாவட்டங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், பெரம்பலூர், வேலூர், அரியலூர், கடலூர், திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் திருவாரூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, தருமபுரி, நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பத்தூர், கரூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி மாவட்டத்திலும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டினம், பர்கூர், மத்தூர், ஊத்தங்கரை ஆகிய ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில், கொடைக்கானல் மற்றும் சிறுமலை பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு, இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் விசாகன் உத்தரவிட்டுள்ளார்.

மாண்டஸ் புயல் காரணமாக சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகங்களின் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வுகள் நடைபெறும் நாள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு முழுவதும் பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் வரும் 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

 

Tags :

Share via