பெண் விஷம் குடித்து தற்கொலை
ஈரோடு மாவட்டம் சிறுவலூர் புது காலனி எம்ஜிஆர் தெருவை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி விமலா தேவி (33). இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் விமலா தேவிக்கு தலைவலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவருக்கு பல்வேறு இடங்களில் மருத்துவ சிகிச்சை பார்த்துள்ளனர். மருத்து செலவுக்காக தங்கவேல் பல்வேறு இடங்களில் கடன் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் விமலாதேவி தனது உடல்நிலை சரி இல்லை என்றும் இதற்காக கடன் சுமை அதிகரித்தது என்றும் மன வேதனையில் இருந்து உள்ளார். நிலையில் சம்பத் அன்று வீட்டில் யாரும் இல்லாத போது விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி (விஷம்) மருந்தை குடித்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் தங்கவேல் தனது மனைவியை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த விமலா தேவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.
Tags :