கஞ்சா என கூறி மாட்டுச் சாணத்தை விற்றவர்கள் கைது
திருப்பூர் மாவட்டம் பழக்குடோன் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, இளைஞர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் ரூ.33ஆயிரம் கொடுத்து கஞ்சா வாங்கி வந்ததாக கூறியுள்ளனர். போலீசாரின் சோதனையில், மாட்டுச் சாணத்தை கஞ்சா என ஏமாற்றி இளைஞர்களிடம் விற்றது தெரியவந்தது. தொடர்ந்து கஞ்சா விற்ற இருவர், வாங்கிய இருவர் என நான்கு பேரையும் போலீசார் கைது செய்து செய்தனர்.
Tags :