டார்ச் வெளிச்சத்தில் பிரசவம் - தாயும் சேயும் பலி

by Staff / 03-05-2024 11:56:07am
டார்ச் வெளிச்சத்தில் பிரசவம் - தாயும் சேயும் பலி

மகாராஷ்டிர மாநிலம் மும்பை பப்துப் அரசு மகப்பேறு மருத்துவமனையில் நிறைமாத கர்ப்பிணிக்கு மொபைல் டார்ச் லைட் வெளிச்சத்தில் பிரசவம் பார்த்ததால் தாயும், குழந்தையும் உயிரிழந்தனர். நிறைமாத கர்ப்பிணி சாஹிதுன் (26) மற்றும் அவரது குழந்தையும் பிரசவத்திற்கிடையே உயிரிழந்தனர். அறுவை சிகிச்சையின் போது மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், ஜெனரேட்டரும் செயல்படாமல் போயுள்ளது. இது குறித்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்த நிலையில், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via