ஆலமரம் விழுந்து விபத்தில் இருவர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சாலையோரம் இருந்த 100 ஆண்டுகள் பழைமையான ஆலமரம் ஒன்று அவ்வழியாக சென்ற செப்டிங் டேங் லாரி மீது வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில், வாகனத்தில் இருந்த மாரப்பா மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், மரத்தின் அடியில் சிக்கியுள்ள சடலங்களை மீட்கும் முயற்சியில் தீயனைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :