ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு சரமாரி வெட்டு

by Staff / 26-01-2024 03:22:38pm
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு சரமாரி வெட்டு

சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் அருகில் உள்ள கல்லுவழி கிராமத்தில், நேற்று இரவு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 5 பேரை கொடூரமாக வெட்டி, நகை பணம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தாக்குதலில் படுகாயமடைந்த மர வியாபாரி சின்னப்பன் (75 ) அவரின் மனைவி உபகாரம் (70) மருமகள் அரசி (38), 15 வயது பேத்தி, 12 வயது பேரன் ஆகியோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

Tags :

Share via