காதலித்தபெண்ணை கழுத்தை இறுக்கி கொலை செய்தவனுக்கு ஆயுள்தண்டனை

by Editor / 10-06-2022 09:26:54am
காதலித்தபெண்ணை கழுத்தை இறுக்கி கொலை செய்தவனுக்கு ஆயுள்தண்டனை

தேனி மாவட்டம் கரட்டுப்பட்டியைச் சேர்ந்த லோகிதாசன், அதே பகுதியில் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த ஜெயப்பிரதா என்ற பெண்ணை 2011 ஆம் ஆண்டு காதலித்து வந்துள்ளனர்.இந்த நிலையில் ஜெயப்பிரதா,  தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு லோகிதாசனை வற்புறுத்தியுள்ளார்.

இதனால் எரிச்சலான லோகிதாசன் காதலி ஜெயபிரதாவை கொலைசெய்ய முடிவு செய்து அவர் அணிந்திருந்த சேலையை கொண்டு கழுத்தை இறுக்கி  கொலை செய்துள்ளார். இந்த கொலைச் சம்பவம் குறித்து ஆண்டிபட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணையானது தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கு விசாரணை முடிவுற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

லோகிதாசனுக்கு எஸ்சி,எஸ்டி, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், அதை கட்டத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும்   விதித்து நீதிபதி சாந்தி செழியன் தீர்ப்பு வழங்கினார். 

 

Tags : Life imprisonment for the man who strangled and killed his girlfriend

Share via