ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்த அமைச்சர் செந்தில் பாலாஜி

by Staff / 08-09-2023 01:15:47pm
ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்த அமைச்சர் செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லியிடம் முறையிட்டுள்ளனர். முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி மனுத்தாக்கல் செய்ய அனுமதி அளித்துள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமின் மனுவை எம்.பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் விசாரிக்குமா? அல்லது முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்குமா? என்ற குழப்பம் நிலவி வந்த நிலையில், முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

 

Tags :

Share via