பிறந்து 4 நாள் ஆன குழந்தையின் உடல் உறுப்புகள் தானம்

by Staff / 31-10-2023 12:09:28pm
பிறந்து 4 நாள் ஆன குழந்தையின் உடல் உறுப்புகள் தானம்

குஜராத்தில் பிறந்து 4 நாள்களே ஆன குழந்தை மூளைச்சாவு அடைந்ததால், அக்குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன் காரணமாக, 9 மாத குழந்தை உள்பட மூன்று குழந்தைகளுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. குடும்பத்தினரின் ஒப்புதலைத் தொடர்ந்து, குழந்தையின் 2 சிறுநீரகங்கள், 2 விழி வெண்படலங்கள் (கார்னியா), கல்லீரல், மண்ணீரல் உள்ளிட்டவை தானமாகப் பெறப்பட்டன. ஜீவன்தீப் உடல் உறுப்பு தானம் அறக்கட்டளை இந்த தகவலை தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via