ஆந்திராவில் கொரோனா தொற்று உறுதி

ஆந்திரப்பிரதேசம் மாநிலம் விசாகபட்டினத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அம்மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தற்போது வீட்டுத்தனிமையில் இருக்கிறார். பெண்ணின் கணவர், குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா உறுதி செய்யப்படவில்லை. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க மாநில அளவில் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags :