கேரளாவில் கணிசமாக அதிகரிக்கும் கொரோனா

கொரோனா வைரஸ் பரவல் கேரளா மாநிலத்தில் தீவிரமடைந்துள்ள காரணத்தால் முகக்கவசம் அணிய வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், "கேரளாவில் கொரோனா பரவல் கணிசமான அளவு அதிகரிக்கிறது. மக்கள் மருத்துவமனை உட்பட பொதுஇடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிந்துகொள்ளுங்கள். மாநிலத்தில் அதிகபட்சமாக கோட்டயத்தில் 57 பேருக்கும், எர்ணாகுளத்தில் 34 பேருக்கும், திருவனந்தபுரத்தில் 30 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
Tags :