4 பெண்களை மணந்த கல்யாண மன்னன்
சென்னை கொடுங்கையூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சாமுவேல், இவருக்கு சோனியா, சொர்ணா என்ற இரட்டை மகள்கள் உள்ளனர். இதில் சோனியா ஆள்வான் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து கர்ப்பமடைந்த சோனியாவை பார்த்துக்கொள்ள வந்த சொர்ணாவுடன் பழக்கமாகி அவரையும் திருமணம் செய்துள்ளார். ஆள்வான் குடித்துவிட்டு இரண்டு மனைவிகளையும் துன்புறுத்தியுள்ளார். இதனால் தாய் வீட்டிற்கு இருவரும் சென்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்து அவர்களின் தந்தையை கடத்தி நாடகமாடியுள்ளார். தகவலில் பேரில் அவரை பிடித்த போலீசார் விசாரணையில் ஆழ்வானுக்கு ஏற்கனவே காயத்திரி, சுகந்தி என்ற இரண்டு மனைவிகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Tags :