சுவரை தொட்டாலே உதிர்ந்து கொட்டுது குடிசை மாற்று வாரிய வீடு குறித்து கமல் கண்டனம்

by Editor / 17-08-2021 07:07:35pm
சுவரை தொட்டாலே உதிர்ந்து கொட்டுது குடிசை மாற்று வாரிய வீடு குறித்து கமல் கண்டனம்



தமிழக அரசின் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் சுவர் தொட்டாலே உதிர்ந்து கொட்டுவதாக கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


குடிசை மாற்று வாரியத்தின் கீழ் சென்னை புளியந்தோப்பு கே.பி,பார்க்கில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது. மக்கள் அக்குடியிருப்புகளில் குடியேறி சில மாதங்களே ஆகியுள்ள நிலையில் சுவர்கள் கை வைத்தாலே உதிர்ந்து கொட்டுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன் 'புளியந்தோப்பு கே.பி. பார்க் பன்னடுக்கு குடியிருப்பு தொட்டாலே உதிர்கிறது. ஒவ்வொரு வீட்டிற்கும் எழுதிய செலவுக் கணக்கு சுமார் 15 லட்சம். 1000 ரூபாய் எலெக்ட்ரிக் ஷேவருக்குக் கூட ஓராண்டு கேரண்டி உண்டு. இதைக் கட்டிய ஒப்பந்தக்காரரை உடனடியாக விசாரிக்கவேண்டும். மொத்த கட்டிடத்தையும் இடித்துவிட்டு அதே ஒப்பந்தக்காரரின் பணத்தில் புதிதாக கட்ட வைக்க வேண்டும். அரசு இக்கட்டிடத்தின் உறுதியை நேரடியாக கண்காணிக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via