கோயிலில் ஆபாச படம் பார்த்த இளைஞர் கைது

by Staff / 26-09-2022 12:10:58pm
கோயிலில் ஆபாச படம் பார்த்த இளைஞர் கைது

சென்னை திருவல்லிக்கேணி மேயர் சிட்டிபாபு தெருவில் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த 19ஆம் தேதி இரவு கோயிலுக்கு வந்த அடையாளம் தெரியாத 30 வயது இளைஞர் ஒருவர், கோயிலில் அமர்ந்து தனது செல்போனில் ஆபாசப் படம் பார்த்துள்ளார். அதனோடு, பார்த்த ஆபாச படத்தை அங்குள்ள சிசிடிவி கேமரா முன்பும் காண்பித்துள்ளார். இளைஞரின் இந்த அநாகரீகமான செயல் கோயிலில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கோயில் பூசாரிகள், இதுகுறித்து ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

புகாாரின் பேரில், கோயிலில் அநாகரிகமாக நடந்து கொண்ட அடையாளம் தெரியாத இளைஞர் மீது மத உணர்வை புண்படுத்துதல், ஆபாச செயலில் ஈடுபடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சிசிடிவி கேமராவில் பதிவான அடையாளங்களை கொண்டு, தப்பியோடிய இளைஞரை தீவிரமாக தேடி வந்தனர். அதன்படி தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, அருண் என்கிற அந்த இளைஞரை போலீஸார் இன்று கைது செய்தனர்.

விசாரித்ததில், தனியார் கல்லூரியில் விசுவல் கம்யூனிகேசன் படித்துவிட்டு மத்திய அரசு பணிக்கு தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார். மன அழுத்தத்தில் இருந்த அந்த நபர், குடிபோதையில் என்ன நடந்தது என்று தெரியாமல் ஆபாச படத்தை செல்போனில் பார்த்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். மது போதையில் ஏடிஎம் கார்டு மற்றும் செல்போன் ஆகியவற்றை தொலைத்துவிட்டு பாண்டிச்சேரி சென்று விட்டதாகக் கூறியுள்ளார்.

 

Tags :

Share via