கால்வாயில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்த முதியவர்.

by Staff / 17-10-2022 12:40:32pm
கால்வாயில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்த முதியவர்.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே கால்வாயில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்த முதியவர். போலீசார் விசாரணை கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே தும்பக்கோடு பகுதியில் கோதையாறு இடது கரை கால்வாய் உள்ளது. பேச்சிப்பாறை அணையில் நீர் இந்த கால்வாய் வழியாக செல்கிறது. இந்த நிலையில் இன்று அரியம்பாக்கோடு பகுதியில் கால்வாயின் குறுக்கே ஷட்டர் அமைந்துள்ள இடத்தில் முதியவர் ஒருவர் அழுகிய நிலையில் சடலமாக கிடப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அங்கு கூட்டம் கூடினர். இது குறித்து குலசேகரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த குலசேகரம் போலீசார் கால்வாயில் பிணமாகக் கடந்த முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்து கிடந்த முதியவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

 

Tags :

Share via