தென் கொரிய அதிபர் லீ ஜே-மியுங் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகிறார்.

by Admin / 17-04-2026 01:17:08am
தென் கொரிய அதிபர் லீ ஜே-மியுங் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் தென் கொரிய அதிபர் லீ ஜே-மியுங்வரும் ஏப்ரல் 19 முதல் 21 வரைமூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகிறார். மேற்கொள்ளப்படும் .இந்த பயணத்தின் போது, பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார்..கப்பல் கட்டுமானம், செயற்கை நுண்ணறிவு  செமிகண்டக்டர் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.
தென் கொரிய அதிபர்மனைவி மற்றும் தென் கொரியாவின் முதல் பெண்மணியான கிம் ஹீ கியுங், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் முன்னணி வணிகத் தலைவர்கள் இந்தப் பயணத்தில் பங்கேற்கின்றனர். 

 

Tags :

Share via
Logo