கஞ்சா விற்பனை வட மாநில வாலிபர் கைது

by Staff / 14-01-2023 01:44:54pm
கஞ்சா விற்பனை வட மாநில வாலிபர் கைது

பெருந்துறை பகுதியில் கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த, வட மாநில வாலிபரை பெருந்துறை போலீசார் கைது செய்தனர்.பெருந்துறையை அடுத்துள்ள பணிக்கம்பாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் அந்தப் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த ஒரு நபரை பிடித்து விசாரித்த போது, அவர் மேற்குவங்க மாநிலம், பங்கரா பகுதியைசேர்ந்த ரஹீபுர் இஸ்லாம் காஜி என்பதும், பணிக்கம்பாளையம் பகுதியில் தங்கி ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர், கஞ்சா விற்பனை செய்வதும் தெரிய வந்தது. அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து கைது செய்த போலீசார் அவரை பெருந்துறை கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

 

Tags :

Share via