கணவருடன் தொடர்பு: பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த மனைவி

by Staff / 13-08-2024 11:35:28am
கணவருடன் தொடர்பு: பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த மனைவி

திருவள்ளூரை சேர்ந்த சுரேஷ் (40) மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்கிறார். இவர் மனைவி பார்வதி. சுரேஷ்க்கு அவரது கடையில் வேலை செய்யும் ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த பார்வதி கணவரை தட்டிக்கேட்டும், சுரேஷ் கள்ளக்காதலை தொடர்ந்தார். இதனால் ஆத்திரமடைந்த பார்வதி, ராஜேஸ்வரி மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தார். படுகாயமடைந்த அவர் ஆபத்தான நிலையில் கடந்த 4 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார். பார்வதியை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via