மிளகாய் பொடியை தூவி காரில் பைனான்சியரை கடத்திய மர்ம கும்பல்

by Editor / 23-08-2022 04:06:32pm
மிளகாய் பொடியை தூவி காரில் பைனான்சியரை  கடத்திய மர்ம கும்பல்

நாமக்கல் மாவட்டம் பாதைரயில் கவுதம் என்ற பைனான்சியர் மிளகாய் பொடி தூவிய காரில் கடத்தி சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். நேற்று இரவு வழக்கம் போல் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த கௌதம்  வீட்டின் அருகே காத்திருந்த மர்ம கும்பல் ஒன்று மிளகாய் பொடியை தூவி இரு சக்கர வாகனத்துடன் காரில் கடத்தி சென்றது கடத்தப்பட்ட கௌதமின் மனைவி திவ்யா கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்திவரும் போலீசார் கடத்தப்பட்ட இடத்தில் சிதறிக்கிடந்த காலணி உடைந்த மூக்கு கண்ணாடி ரத்தக்கரை மற்றும் சிறிய துண்டு ஆகிய படங்களை சேகரித்து தனிப்படை அமைத்து கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via