ரயிலில் பாய்ந்து வாலிபர் தற்கொலை

by Staff / 10-12-2022 02:39:12pm
ரயிலில் பாய்ந்து வாலிபர் தற்கொலை

தாம்பரம் குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே, வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு, தலை துண்டான நிலையில் இறந்து கிடப்பதாக, நேற்று முன்தினம் இரவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில் அந்த வாலிபர், புதுக்கோட்டையைச் சேர்ந்த அகிலன், 20, என்பது தெரியவந்தது.பட்டதாரியான அவர், வேலை தேடி, ஐந்து நாட்களுக்கு முன், குரோம்பேட்டைக்கு வந்து, நண்பர்களுடன் தங்கியிருந்தது தெரியவந்தது.தலை துண்டான நிலையில் உடல் கிடந்ததால், அகிலன் தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தாம்பரம்ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via