விஷம் குடித்து தற்கொலை
ஈரோடு சடையம்பாளையம் ரோடு முத்துசாமி காலனி பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி (66). கடந்த அக்டோபர் மாதம் இவரது மனைவி செல்வி இறந்துவிட்டார். இதனால், மனவேதனையில் இருந்த சுப்ரமணி சரியாக சாப்பிடாமல் மது அருந்தி வந்துள்ளார்.இந்நிலையில், சுப்பிரமணி நேற்று முன்தினம் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை முயன்றுள்ளார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று சுப்ரமணி உயிரிழந்தார். இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
Tags :