கரு கலைப்பின்போது உயிரிழந்த கர்ப்பிணி
புதுக்கோட்டை அருகே கர்ப்பிணி பெண் ஒருவர் தனது கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்பதை கண்டறிந்து அதன் பின் கருக்கலைப்புக்கு சம்மதித்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் மருத்துவமனையில் அவருக்கு கருக்கலைப்பு செய்த போது எதிர்பாராத விதமாக அந்த கர்ப்பிணிப் பெண் இறந்துவிட்டார். இதனையடுத்து மருத்துவமனைக்கு சீல் வைக்க உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். ஸ்கேன் சென்டரை முறையாக பராமரிக்காத காரணத்தால் சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்தார்.
Tags :