ரயிலில் 4 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது!.

by Editor / 13-12-2023 09:32:21am
ரயிலில் 4 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது!.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில்வே சந்திப்பு வழியாக ஒரிசா மாநிலத்தில் இருந்து கேரளா வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வட மாநில வாலிபர் சாகுல்ஹமீத் (21) என்பவர் சுமார் 4 அரை கிலோ கஞ்சாவை மறைத்து எடுத்து சென்றுள்ளார். இது குறித்து ரயில்வே போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கஞ்சா கடத்திய வாலிபரை கையும் களவுமாகப் பிடித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

Tags : ரயிலில் 4 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது!.

Share via