அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் புதிய ரயில் பாதையில் அதிவேக சோதனை ரயில் இயக்கம் ஜனவரி 12 அன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது

by Editor / 11-01-2022 11:13:59pm
அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் புதிய ரயில் பாதையில் அதிவேக சோதனை ரயில் இயக்கம் ஜனவரி 12 அன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது

மதுரை - தூத்துக்குடி இடையே அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையத்திலிருந்து மேலமருதூர் வரை 18 கிமீ தூரத்திற்கு புதிய ரயில் பாதை பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த புதிய ரயில் பாதையில் புதன்கிழமை (12.01.2022) அன்று ரயில் இன்ஜின் சோதனை வேக ஓட்டம் நடைபெற உள்ளது. ஜனவரி 12 அன்று காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை இரு மார்க்கத்திலும் ரயில் இன்ஜின் 120 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி சோதனை நடைபெற உள்ளது. எனவே அந்த நேரத்தில் பொதுமக்களும் புதிய ரயில் பாதை அருகே வசிப்போரும் ரயில் பாதையை நெருங்கவோ, கடக்கவோ வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.

 

Tags :

Share via