ரயில் விபத்து - ஆந்திர முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

by Staff / 04-06-2023 05:22:07pm
ரயில் விபத்து - ஆந்திர முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த ஆந்திராவைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் அறிவித்துள்ளார். படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் மற்றும் சிறு காயங்கள் அடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரயில்வே அமைச்சகம் ரூ.10 லட்சம் அறிவித்துள்ளது. ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் இதுவரை 275 பேர் உயிரிழந்துள்ளனர். பலியான 275 பேரில் 88 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

 

Tags :

Share via