திருமணத்திற்கு சம்மதிக்காத சிறுமிக்கு கத்திக்குத்து

by Staff / 20-02-2023 11:55:26am
திருமணத்திற்கு சம்மதிக்காத சிறுமிக்கு கத்திக்குத்து

சத்தீஸ்கர்: ராய்பூரில் 16 வயது சிறுமி, ஓம்கார் திவாரி (47) என்பவரது கடையில் வேலை செய்துள்ளார். ஓம்கார் சிறுமியை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக அவரது தாயிடம் கூறிய நிலையில், சிறுமியின் தாய் மறுத்தார். மேலும், கடையில் வேலையை ராஜினாமா செய்வதாக சிறுமி கூறியதையடுத்து, ஆத்திரமடைந்த ஓம்கார், அவரை கத்தியால் குத்தி, நடுரோட்டில் தரதரவென இழுத்துச் சென்றார். அதோடு, சிறுமியின் தலைமுடியை பிடித்தபடி, கொடூரமாக தாக்கினார். இந்த சம்பவத்தின் வீடியோ வைரலானதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

 

Tags :

Share via