போலி ஆவணங்கள் மூலம்  நிலத்தை விற்க முயற்சி 6பேர் கைது.ஒருவர் தலைமறைவு.

by Editor / 02-03-2023 02:45:57pm
போலி ஆவணங்கள் மூலம்  நிலத்தை விற்க முயற்சி 6பேர் கைது.ஒருவர் தலைமறைவு.

 தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த கற்குடிபகுதியை சேர்ந்தவர் வேல் பாண்டியன் இவருக்கு சொந்தமான 42 சென்ட் நிலத்தை மனைவி ராஜம்மாளுக்கு தானம் செய்துள்ளார்.இந்த நிலையில் அந்த நிலத்தை செங்கோட்டை மேலுரை  சேர்ந்த அசன் ஷேக் மைதீன் என்பவரிடம் விற்பனை செய்வதற்காக நிலத்தின் ஒரிஜினல் பத்திரத்தை வழங்கியுள்ளனர்.இந்தநிலையில் நிலத்தை போலியான வில்லங்க சான்றிதழை தயாரித்தும், ஆவணங்களை திருத்தி போலி ஆவணங்கள் தயார் செய்து நிலத்தை விற்க முயற்சி செய்வதாக கூறி கணவன்,மனைவி,2 மகள்கள்,மற்றுமொரு பெண் ,பாத்திரம் தயார் செய்த எழுத்தர் அரசு கோபால்,நிலத்தை வாங்கும் நபரான  அசன் ஷேக் மைதீன் உள்பட ஏழு பேர் மீது செங்கோட்டை  சார் பதிவாளர் தீபிகா அளித்த புகாரின் பேரில் செங்கோட்டை போலீசார் வழக்கு.பதிவு செய்து அசன் ஷேக் மைதீன் என்பவரைத்தவிர மற்ற 6 பேரை கைது செய்து செங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

 

Tags :

Share via