வாலிபரை கடத்தி கொடூர தாக்குதல்
நாட்டில் குற்றங்களை குறைப்பதற்கு அதிகாரிகள் எவ்வளவு போராடினாலும் சிலர் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தவிர்ப்பதில்லை. சமீபத்தில் கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் சில குண்டர்கள் வாலிபரை கொடூரமாக தாக்குவதை பார்க்கலாம். இந்த சம்பவம் கடந்த மாதம் 25 ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் நடந்துள்ளது. அங்கு நடைபெற்ற திருமணத்திற்கு வந்த வாலிபரை கார் ஓட்டுநர்கள் கடத்தி கொடூரமாக தாக்கியுள்ளனர்.
Tags :