‌ மாங்காய் விற்பனை குடோனில் தீ விபத்து

by Staff / 18-02-2023 01:46:17pm
 ‌ மாங்காய் விற்பனை குடோனில் தீ விபத்து

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வேம்பார்பட்டியில் இருந்து கே. அய்யாபட்டி சொல்லும் ரோட்டில் அதே பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவரது மாங்காய் கமிஷன் குடோன் உள்ளது. இந்த குடோன் மாங்காய் விற்பனைக்கு வரும் மே, ஜூன் மாங்காய் சீசன் மாதங்களில் மட்டும் திறக்கப்பட்டு மா விவசாயிகளிடமிருந்து கமிஷன் அடிப்படையில் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் பிற மாநிலங்களுக்கும் மாங்காய் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது மாங்காய் சீசன் இல்லாததால் இந்த குடோன் பூட்டி வைத்திருந்த நிலையில் இரவு திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்த தீ விபத்தில் குடோனில் உள்ள 500க்கும் மேற்பட்ட மாங்காய் ஏற்றுச் செல்லும் பெட்டிகள், எடை மெஷின் என பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின. தகவல் அறிந்து திண்டுக்கல் மற்றும் நத்தம் தீயணைப்புத் துறையினர் வருவதற்குள்ளாகவே மாங்காய் குடோனின் பெரும்பகுதி எரிந்து நாசமாயின. அதன் பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இந்த விபத்திற்கான காரணம் மின்கசிவா அல்லது வேறு ஏதேனும் காரணமா என சாணார்பட்டி போலீசார்‌ விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via