விவசாயத்திற்கு நீரை திறக்க வலியுறுத்தி சாலை மறியல்
தமிழகத்தில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழையோடு புயல்மழையின் சேர்ந்து வலுபெற்றதன் காரணமாக தமிழகம் முழுவதும் வழக்கத்தைவிட அதிகளவில் மழை பெய்து ஏரிகள், குளங்கள், பெருகியுள்ளன.ஏராளமான நீர்த்தேக்கங்கள் முழுகொள்ளளவை எட்டி உபரிநீர் கால்வாய்கள் மூலமாக வெளியேற்றப்பட்டு வருகின்றன.இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே அருப்புக்கோட்டை - இராமேஸ்வரம் சாலையில் சேதுராயனேந்தல் கிராமத்தில் விவசாயம் செய்யமுடியாத சூழல் ஏறபட்டுள்ளதாகவும் அதனை சரிசெய்யவேண்டுமென வலியுறுத்தி பொதுமக்கள் கண்மாய்க்கு தண்ணீர் வரும் கால்வாய் பகுதியை மறையூர் கிராம மக்கள் அடைத்ததாகக் கூறி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதன் காரணமாக அப்பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
Tags :