அடுக்கடுக்கான கேள்விகளுக்குத் தயங்காமல் பதிலளித்த மேயர்

by Staff / 03-05-2023 04:21:09pm
அடுக்கடுக்கான கேள்விகளுக்குத் தயங்காமல் பதிலளித்த மேயர்


'மக்களைத் தேடி மேயர்' திட்டத்தின் கீழ் வட சென்னை பகுதிக்குட்பட்ட மண்டல அலுவலகத்தில் சென்னை மேயர் பிரியா மக்களின் கோரிக்கை மனுவினை நேரடியாகப் பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், '' மக்களைத் தேடி மேயர் திட்டத்தின் கீழ் மக்களிடம் இருந்து நேரடியாகப் பெறப்படும் மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் தீர்வுக்காணப்படும்.சென்னை மாநகராட்சிக்குட்பட்டப் பகுதிகளில் சாலைகளைச் சீரமைக்கும் பணிகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. 10, 200 குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளைக் கண்டறிந்து, அவற்றைச் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் மீது எந்தவிதமான புகார்களும் வரவில்லை. தீவிரமாகச் சிறப்பாக மக்கள் பணியினை மேற்கொண்டு வருகிறார்கள். பொதுமக்களிடமும் நல்ல பெயர் உள்ளது.அதிமுக ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருக்கலாம். அதுகுறித்துத் தமிழக அரசு விசாரணை மேற்கொள்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் தான் ஆகிறது அதனால் எங்கள் மாமன்ற உறுப்பினர்கள் மீது எந்தவிதமான புகார்களும் குற்றச்சாட்டுகள் வரவில்லை'' என்றார்.செய்தியாளர்களின் அடுக்கக்கடுக்கான கேள்விகளுக்கு மேயர் பிரியா பதிலளிப்பதை அமைச்சர் சேகர்பாபு வியப்புடன் அவரையே பார்த்தவாறு அருகில் அமர்ந்திருந்தார்.

 

Tags :

Share via