விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் நித்திரவிளையில் அடக்கம்

by Staff / 03-10-2022 05:47:30pm
விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் நித்திரவிளையில் அடக்கம்

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியை சேர்ந்தவர் அர்ஜுன் (36). ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இவர் அந்தமானில் பணியாற்றிய நிலையில் தற்போது பஞ்சாப் மாநிலம் பதான்கோட் பகுதிக்கு இடமாறுதல் வழங்கப்பட்டது. இதனால் ஊருக்கு வந்துவிட்டு பதான்கோட்டில் பணியாற்ற வேண்டி கடந்த 28ஆம் தேதி காலை திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி ரயிலில் புறப்பட்டு சென்றார். 29ஆம் தேதி இரவு 9 மணி அளவில் ரயில் வாசலில் நின்றிருந்த போது, சந்திரபூர் ரயில் நிலையத்திற்கும் நாக்பூர் ரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். உடன் சென்றவர்கள் இவரை காணாததால், ரயில்வே ஊழியர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். தொடர்ந்து தேடுதல் நடத்திய போது பலத்த காயத்துடன் இறந்த நிலையில் அஜின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதை அடுத்து இறந்த ராணுவ வீரர் உடலை நேற்று நித்திரவிளை யில் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து ராணுவ வீரரின் உடலில் ராணுவ வீரர்கள் தேசிய கொடியை போர்த்தி மரியாதை செலுத்தினர். மதச் சடங்குடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. ராணுவரின் உடலுக்கு கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார், வாவரை ஊராட்சி தலைவி மெட்டில்டா, உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். உயிரிழந்த ராணுவ வீரருக்கு அஜிதா என்ற மனைவியும் மூன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும் உள்ளனர்

 

Tags :

Share via