30 மணி நேரத்திற்கு கனமழை பெய்துள்ளது- சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்.

by Editor / 04-12-2023 10:45:57pm
 30 மணி நேரத்திற்கு கனமழை பெய்துள்ளது- சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்.

புயல் சென்னைக்கு மிக அருகில் நிலைகொண்டு 30 மணி நேரத்திற்கு கனமழை பெய்துள்ளது. கடல் தொடர்ந்து கொந்தளிப்பாக இருந்ததால் ஆற்றில் இருந்து வரும் தண்ணீரை, கடல் உள்வாங்க முடியவில்லை. ஆற்றில் தண்ணீர் அதிகம் இருப்பதால் கால்வாய்களில் உள்ள தண்ணீரை, ஆறு உள்வாங்கவில்லை. 

கால்வாயில் தண்ணீர் அதிகம் இருப்பதால் மழை நீர் வடிகால்களில் உள்ள தண்ணீரை, கால்வாய் உள்வாங்கவில்லை. இதனால் தான் சென்னையில் தண்ணீர் அதிகளவில் தேங்கியுள்ளது. மழை குறைந்ததும் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாகஇந்த  வடியத்தொடங்கும்-- சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்.

 

Tags : சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்.

Share via