ரூ.19,500 கோடியை இன்று விடுவிக்கிறார் பிரதமர்... காணொலி மூலம், விவசாய பயனாளிகளுடன் கலந்துரையாடல்..

by Admin / 09-08-2021 12:18:56pm
ரூ.19,500 கோடியை இன்று விடுவிக்கிறார் பிரதமர்...  காணொலி மூலம், விவசாய பயனாளிகளுடன் கலந்துரையாடல்..

 

பிரதமர் கிசான் திட்டத்தின் அடுத்த தவணைத் தொகையாக 19 ஆயிரத்து 500 கோடி ரூபாயை பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார்.
 
பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை இரண்டாயிரம் வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.

இந்த நிதி, விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும். இந்த திட்டத்தில் இதுவரை சுமார் ஒன்றரை லட்சம் கோடி நிதி உதவியானது, விவசாய குடும்பங்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் அடுத்த தவணை நிதியை, பிரதமர் மோடி இன்று  காணொலி காட்சி வாயிலாக விடுவிக்க உள்ளார்.
 
 இந்த விழாவில் மத்திய வேளாண் அமைச்சரும் கலந்து கொள்கிறார்.

இதன்படி 9 கோடியே 75 லட்சம் பேருக்கும் கூடுதலான விவசாய குடும்பங்களுக்கு சுமார் 19 ஆயிரத்து 500 கோடி ரூபாய்,  அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும். இந்த நிகழ்ச்சியின்போது விவசாய பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுவதுடன், நாட்டு மக்களிடமும் உரையாற்றுகிறார்.

 

Tags :

Share via