ஆண்களுக்கு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கவில்லை- அமைச்சர் ராஜகண்ணப்பன்

by Admin / 03-08-2021 12:55:36pm
ஆண்களுக்கு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கவில்லை- அமைச்சர் ராஜகண்ணப்பன்


மாநகர பஸ்களில் இதுவரை 6 கோடி பெண்கள் கட்டணமில்லா பஸ் சேவையை பயன்படுத்தி உள்ளனர்.

ஆண்களுக்கு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கவில்லை- அமைச்சர் ராஜகண்ணப்பன்
போக்குவரத்து அமைச்சர் ராஜகண்ணப்பன்
சென்னை:

தமிழக மாநகர பஸ்களில் ஆண்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 என இருக்கும் நிலையில், ரூ.10 வசூலிக்கப்படுவதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்  குற்றம்சாட்டி இருந்தார்.

 
அதற்கு பதிலளித்த போக்குவரத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாவது:

* அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சொல்வது போல அரசு பஸ்களில் ஆண்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கவில்லை.

ஓ பன்னீர்செல்வம்

* ஒரே ஒரு இடத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்த நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம்  பொதுவாக குற்றம் சாட்டக்கூடாது.

* சாதாரண நகரப் பேருந்துகளில் இதுவரை 6 கோடியே 53 லட்சம் மகளிர் இலவச பயணம் செய்துள்ளனர்.

* நண்பரான திருமாவளவன் அவராகவே பிளாஸ்டிக் சேரில் அமர்ந்தார். இதை பெரிதுபடுத்த அவசியமில்லை.இவ்வாறு அவர் கூறினார்

 

Tags :

Share via