கோயில் கருவறைக்குள்ளும் சமத்துவம் நிலவ வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Staff / 24-08-2024 12:56:31pm
கோயில் கருவறைக்குள்ளும் சமத்துவம் நிலவ வேண்டும்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு பழனியில் ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதனை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்னர் ஆற்றிய உரையில், “ஆலய வழிபாடுகளில் தமிழ் மொழி முதன்மை பெற வேண்டும். திருக்கோயில்களின் கருவறைக்குள் மனிதர்களிடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவ வேண்டும். அன்பால் உயிர்கள் ஒன்றாகும். அறத்தால் உலகம் நன்றாகும்.” என பேசியுள்ளார்.

 

Tags :

Share via