திமுகவின் மெத்தனப் போக்கே விபத்துகளுக்கு காரணம் டிடிவி தினகரன்

by Staff / 29-06-2024 12:25:20pm
திமுகவின் மெத்தனப் போக்கே விபத்துகளுக்கு காரணம்  டிடிவி தினகரன்

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 அப்பாவி தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். திமுக அரசின் மெத்தனப்போக்கால் அடுத்தடுத்து நிகழும் பட்டாசு ஆலை விபத்துக்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பது எப்போது? இனிவரும் காலங்களில் பட்டாசு ஆலை விபத்துக்களை முற்றிலுமாக தவிர்க்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via