கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை

by Staff / 29-06-2024 12:20:37pm
கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை

சட்டப்பேரவையில் இன்று மதுவிலக்கு சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஏற்கெனவே உள்ள தண்டனை போதுமானதாக இல்லை எனக் குறிப்பிட்டு திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதுஅதன்படி, தமிழகத்தில் இனி கள்ளச்சாராயம் உற்பத்தி, விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனையுடன், ₹10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். விற்பவர்களின் அசையா சொத்துகளும் பறிமுதல் செய்யும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

 

Tags :

Share via