பாஜக நிர்வாகியை மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சென்று நலம் விசாரித்தார்

by Staff / 19-12-2022 03:16:14pm
பாஜக நிர்வாகியை மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சென்று நலம் விசாரித்தார்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் பகுதியில் கஞ்சா புழக்கம் அதிகமாக இருப்பதாக தனது முகநூல் பக்கத்தில் வீடியோவை பா. ஜ. க நிர்வாகி துரை தனசேகர் பதிவிட்டுள்ளார். திருக்கழுகுன்றம் காவல் நிலையத்திற்க்கு பா. ஜ. க நிர்வாகி தனசேகர் மற்றும் கஞ்சா வியாபாரம் செய்யும் நான்கு பேரை விசாரணைக்கு அழைத்துள்ளனர். இரு தரப்பினரையும் விசாரணை செய்தனர். விசாரணை முடிந்த பின்னர் தனசேகர் மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். நேற்று மாலை 3 மணி அளவில் வீட்டின் அருகே மர்ம நபர்களால் வெட்டப்பட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரடியாக சென்று உடல் நலம் குறித்து விசாரி த்து குடும்பத்தினருக்கு தனது ஆறுதலை தெரிவித்தார். திமுக ஆட்சியில், இந்தியாவின் கஞ்சா தலைநகரமாக மாறியிருக்கும் தமிழகத்தில், கஞ்சா விற்பவர்களை தட்டிக் கேட்ட பாஜக நிர்வாகி தனசேகர் அவர்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ள கயவர்களை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும்.போதை ஒழிப்பு என்ற பொய் பிரச்சாரங்களை நிறுத்திவிட்டு, அதிகார போதையில் மிதக்காமல் முதலமைச்சர் தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை திறம்பட செய்வார் என்று நம்பும் மக்களை இனியும் ஏமாற்றாமல் தன் பணியில் கவனம் செலுத்துவார் என்று நம்புவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 

 

Tags :

Share via