அவனியாபுரத்தில் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை.
மதுரை அருகே அவனியாபுரம் வள்ளலானந்தபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த நடுக்காட்டு பாண்டியின் மகன் திருநாவுக்கரசு (16) என்பவர் படிப்பை நிறுத்தி விட்டு கட்டிட வேலைக்கு செல்வதாக தெரிகிறது.இவர் வெளியே செல்வதற்காக தனது சகோதரரிடம் மோட்டார் சைக்கிள் கேட்க ஆனால் அவர் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுவன் வீட்டின் உள் அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.இதுகுறித்து நடுக்காட்டு பாண்டி அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :