தவிட்டு சந்தை நடந்தது கொலைதான் குற்றவாளி கைது

by Staff / 20-11-2022 03:16:25pm
தவிட்டு சந்தை நடந்தது கொலைதான் குற்றவாளி கைது

மதுரை தவிட்டு சந்தையில் நடந்தது கொலை என பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

மதுரை தவிட்டு சந்தை பகுதியில் இரண்டு நாட்கள் முன்பாக அதிகாலையில் அனுப்பானடி வடக்கு தெருவை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட சரவணக்குமார் தலையில் அடிபட்டு இறந்து கிடந்தார்.

முதலில் சாலை விபத்தில் இறந்துள்ளாரோ என்று நினைத்த நிலையில் பின்னர் பிரேத பரிசோதனை அறிக்கையில் கொலை செய்யப்பட்டதாக தெரிந்தது.

இது குறித்து விசாரணை நடத்திய தெற்கு வாசல் போலீசார் கொலை செய்த மற்றொரு மனநலம் பாதிக்கப்பட்ட மேல அனுப்பானடியை சேர்ந்த நாக ரத்தினத்தின் மகன் சந்தான குமரன்(41) என்பவரை கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.தற்போது அரசு இராசாசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சந்தான குமரன் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories