காவல்துறையில் கடந்த 3 ஆண்டில் 190 அறிவிப்புகள் - மு.க.ஸ்டாலின்
காவல்துறையில் கடந்த 3 ஆண்டு காலத்தில் 190 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் உரையாற்றி வரும் முதல்வர், "கடந்தாண்டு மற்றும் காவல் துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் எடுக்கப்பட்டுள்ளன. சிறு குற்றங்கள் செய்யும் குற்றவாளிகளைத் திருத்தி அவர்களை மாற்றுவதற்குப் பறவைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. புகார்களை விரைந்து விசாரிக்கவும் நீதிமன்ற வழக்குகளை விரைந்து நடத்தவும் இந்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது" என்று அவர் கூறியுள்ளார்.
Tags :