"ஒரு மனிதர் இறந்தாலும் அது மாபெரும் இழப்புதான்"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Staff / 29-06-2024 12:36:09pm

ஒரு மனிதர் இறந்தாலும் அது மாபெரும் இழப்புதான். இந்த அரசு இன்றைக்கு எதையும் மறைக்கவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா தாக்கல் செய்த பின் சட்டப்பேரவையில் உரையாற்றி வரும் முதல்வர், "கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் குற்றவாளிகளை கைது செய்துள்ளோம். இதன் பிறகும் நடவடிக்கை இல்லை என அவர்கள் கூறுவது பிரச்னையை திசை திருப்பும் நாடகம்" என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via